Thursday, May 16, 2024
Home » பெரம்பலூர் அருகே துணிகரம் பள்ளி வாகனத்தில் மகளை ஏற்றிவிட வந்த பெண்ணிடம் 6 பவுன் பறிப்பு

பெரம்பலூர் அருகே துணிகரம் பள்ளி வாகனத்தில் மகளை ஏற்றிவிட வந்த பெண்ணிடம் 6 பவுன் பறிப்பு

by Arun Kumar

 

பெரம்பலூர், மார்ச் 14: பெரம்பலூர்- துறையூர் சாலையில் மகளை பள்ளி வாகனத்தில் ஏற்றிவிட வந்த பெண்ணின் கழுத்தி லிருந்த ஆறரை பவுன் தாலிக்கொடியை பைக்கில் வந்த மர்ம நபர் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெரம்பலூர் நகராட்சி, துறையூர் சாலையில் கல்யாண்நகர், முத்துகிருஷ்ணா மக்கள் மன்றம் அருகே வசிப்பவர் செந்தா மரைக் கண்ணன்.இவரது மனைவி வாசுகி(48). இவர் நேற்று (13ம் தேதி) காலை 9 மணியளவில் தனது வீட்டில் இருந்து, ஆறாம் வகுப்பு படிக்கும் தனது மகளான ரேஷ்மா என்பவரை தனியார் பள்ளி வாகனத்தில் ஏற்றிவிட சென்றபோது, அடையாளம் தெரியாத டூவீலரில் வந்த மர்மநபர், வாசுகி அணிந்திருந்த தாலிச்செயினை பறித்து இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடிவிட்டார். தாலிச் செயினை பறித்ததால் வாசுகிக்கு கழுத்துக்குக் கீழே சிறுகாயமும் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட வாசுகி தனது கணவர் செந்தாமரைக் கண்ணனுடன் பெரம்பலூர் போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் கருணாகரன் வழக்குபதிவு அப்பகுதியில் பொறுத்தப்பட்டுள்ள சிசி டிவி கேமரா பதிவுகளை பார்வையிட்டு மர்மநபர் குறித்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

You may also like

Leave a Comment

nineteen − 9 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi