திருவாடானை: திருவாடானை அருகே பண்ணவயல் எல்கே நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (48). இவர் பெயின்டராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் இவரது மகளான தேசிகாமணி (22) என்பவருக்கு சாதிச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளார். இந்த சான்றிதழுக்காக கடந்த சில தினங்களாக திருவாடானை வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் அலைக்கழிப்பு செய்ததாகக் கூறப்படுகிறது. இதில் விரக்தி அடைந்த பெயின்டர் கிருஷ்ணமூர்த்தி தாலுகா அலுலகம் முன் மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றுள்ளார். அங்கிருந்த ஊழியர்கள் அவர் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி கிருஷ்ணமூர்த்தியை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
பெயின்டர் தீக்குளிக்க முயற்சி
previous post