Sunday, May 19, 2024
Home » பெண் தூக்குப்போட்டு தற்கொலை

பெண் தூக்குப்போட்டு தற்கொலை

by Karthik Yash

ஆரல்வாய்மொழி, பிப். 24: ஆரல்வாய்மொழி எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் இசக்கியப்பன்(36) இவருக்கு சரஸ்வதி(56) என்று தாயும், மகாலட்சுமி(30) என்ற தங்கையும் உள்ளனர். இவரின் தந்தை சிங்கராஜா இறந்துவிட்ட நிலையில், தங்கைக்கு திருமணமாகி குடும்பத்துடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் தனது தாய் சரஸ்வதியுடன் இசக்கியப்பன் வாழ்ந்து வருகிறார். கடந்த 22ம் தேதி காலை விபத்து வழக்கு சம்பந்தமாக இசக்கியப்பன் பூதப்பாண்டி நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார்.மதியம் வீடு திரும்பிய போது, வீட்டின் பின்புறம் உள்ள கொய்யா மரத்தில் சேலையில் சரஸ்வதி தூக்கு மாட்டிக் கொண்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனைப் பார்த்த இசக்கியப்பன் அதிர்ச்சியடைந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சரஸ்வதியை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். இந்நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி சரஸ்வதி இறந்தார். இது பற்றி ஆரல்வாய்மொழி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

sixteen − three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi