கோவை : கோவை வெரைட்டிஹால் ரோடு சிஎம்சி காலனி பகுதியை சேர்ந்த கூலி வேலை செய்யும் 40 வயதான பெண் தனது வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சதீஷ்குமார் (24) என்பவர் மது போதையில் அந்த பெண்ணை வழிமறித்தார். தன்னுடன் வா என அழைத்து, பாலியல் ரீதியாக துன்புறுத்தல் கொடுத்தார். இதை அந்தப்பெண் தட்டிக்கேட்டார்.
இதில் கோபமடைந்த சதீஷ்குமார் அவரிடம் வாக்குவாதம் செய்தார். அப்போது அங்கே வந்த பெண்ணின் கணவர் எதற்காக என் மனைவியிடம் தகராறு செய்கிறாய்? என கேட்டபோது அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி கொலை செய்வதாக எச்சரித்தார். இது தொடர்பாக அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.