தென்காசி: தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே ஆட்டோவில் பாலியல் சிண்டலில் ஈடுபட்டதாக ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யபட்டார். செங்கோட்டை கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அங்கண்வாடி மையத்தில் வேலை செய்யும் பெண் ஊழியர் ஒருவர் செவ்வாய்க்கிழமை அன்று ஆட்டோவில் பயணம் செய்தார். அப்போது ஆட்டோவை ஒட்டி வந்த கண்ணன் என்பவர் அந்த பெண்ணிடம் பாலியல் சிண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த பெண் கணவருக்கு தகவல் தெரிவித்தனர் அந்த பெண்ணின் கணவர் அந்த ஆட்டோ ஓட்டுனரை சரமாரியாக தாக்கினர். அதே நேரத்தில் அந்த பெண் கையில் வைத்திருந்த துடைப்பத்தால் ஆட்டோ ஓட்டுநர் கண்ணனை சரமாறியாக தாக்கினர். அதன் பிறகு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கண்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்….