திருச்சி: திருச்சி கருமண்டபம் பகுதியை சேர்ந்த பெண்ணிடம் செயின்பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி கருமண்டபம் ஜெயநகர் முதல் தெருவை சேர்ந்தவர் ஜெயசீலி (54). இவர் நேற்றுமாலை ஜெயநகர் 2வது தெருவில் உள்ள தனது மகள் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரில் பைக்கில் வந்த மர்மநபர் கண்ணிமைக்கும் நேரத்தில் ஜெயசீலி கழுத்தில் கிடந்த 4 பவுன் தாலி செயினை பறிக்க முயன்றார். ஜெயசீலி செயினை கைகளால் பிடித்துக்கொண்டு போராடியதில் செயினின் ஒரு பகுதி அவர் கையிலும், மீதி செயின் மர்ம நபரின் கையிலும் சிக்கிக்கொண்டது. இதையடுத்து செயினுடன் மர்ம நபர் அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து ஜெயசீலி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.
பெண்ணிடம் செயின் பறிப்பு
previous post