ஆலந்தூர்: பரங்கிமலை போலீஸ் உதவி கமிஷனர் அமீர் அகமது, இன்ஸ்பெக்டர் செல்லப்பா, எஸ்ஐக்கள் பாரதி, கன்னியப்பன், ஆகியோர் தலைமையில் போலீசார், மவுண்ட் பூந்தமல்லி சாலையில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே பூண்டு முட்டைகளுடன் வந்த ஒரு வேனை மடக்கி சோதனை செய்தபோது, பூண்டு மூட்டைகளுக்கிடையே குட்கா பொருட்களை மறைத்து கடத்துவது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். விசாரணையில், ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த வேன் டிரைவர் சிவக்குமார் (44) என்பதும், கர்நாடகாவில் இருந்து குட்கா பொருட்களை கடத்தி வந்து, சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள பெட்டிக் கடைகளுக்கு விற்றது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ரூ3 லட்சம் மதிப்புள்ள 500 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்….
பூண்டு மூட்டைக்குள் மறைத்து கடத்திய ரூ3 லட்சம் குட்கா பறிமுதல்
previous post