தியாகதுருகம், ஜூன் 23: தியாகதுருகம் அடுத்து ஈய்யனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிராஜ் மகள் மகாலட்சுமி (21). இவர் பள்ளி படிப்பை முடித்துவிட்டு பெற்றோருக்கு துணையாக கூலி வேலை பார்த்து வந்துள்ளார். அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த மகாலட்சுமி வீட்டில் யாரும் இல்லாதபோது பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். இதனைக்கண்ட அவரது தாயார் ராசாத்தி உடனடியாக அவரை மீட்டு ஈய்யனூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மகாலட்சுமியின் தந்தை மணிராஜ் அளித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பூச்சிமருந்து குடித்து இளம்பெண் தற்கொலை
previous post