Thursday, May 9, 2024
Home » புளியரை அருகே பறக்கும் படையினர் அதிரடி உரிய ஆவணங்களின்றி வாகனங்களில் கொண்டு சென்ற ₹2.70 லட்சம் பறிமுதல்

புளியரை அருகே பறக்கும் படையினர் அதிரடி உரிய ஆவணங்களின்றி வாகனங்களில் கொண்டு சென்ற ₹2.70 லட்சம் பறிமுதல்

by Mahaprabhu

செங்கோட்டை,மார்ச் 24: தமிழகம் – கேரளா எல்லையான புளியரை அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ₹2.70 லட்சம் ரொக்கத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நெல்லை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட நெல்லை, பாளை, ராதாபுரம், நாங்குநேரி, ஆலங்குளம், அம்பாமுத்திரம் 6 சட்டமன்ற தொகுதிகளிலும் பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுவினர் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் தமிழகம்-கேரளா எல்லையான புளியரை சோதனை சாவடி அருகே தேர்தல் பறக்கும் படையினர் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து மாடு வாங்க வந்த மாட்டு வியாபாரி நிஜாம் என்பவரிடம் ₹1 லட்சத்து 10 ஆயிரமும், புனலூர் அருகே அஞ்சல் பகுதியைச் சேர்ந்த ஜவுளி வியாபாரி முகமது ஆசிப் கான் என்பவரிடம் ₹70 ஆயிரமும், திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் நாயர் என்பவரிடமிருந்து ₹90 ஆயிரம் ரொக்கம் கொண்டு வந்துள்ளனர். அப்போது அவர்களிடம் பணத்திற்கான ஆவணங்களை பறக்கும் படை அதிகாரிகள் கேட்டனர். ஆனால் அவர்களிடம் முறையான உரிய ஆவணங்கள் இல்லாதது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் கொண்டு வந்த ₹2.70 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு கடையநல்லூர் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

You may also like

Leave a Comment

five × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi