விகேபுரம், செப்.29: நெல்லை புறநகர் அதிமுக மாவட்ட செயலாளராக இசக்கி சுப்பையா எம்எல்ஏ நியமனம் செய்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதையடுத்து சிவந்திபுரம் ஊராட்சி ஒன்றிய செயலாளர் விஜயபாலாஜி தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது. இதில் அம்பாசமுத்திரம் நகராட்சி கவுன்சிலரும், முன்னாள் அம்பை நகராட்சி துணைத்தலைவருமான மாரிமுத்து, மணிமுத்தாறு பேரூராட்சி முன்னாள் தலைவர் சிவன் பாபு, ஒன்றிய துணை செயலாளர் பிராங்கிளின், கஸ்பா பழனி, ஒன்றிய அவைதலைவர் சண்முகவேல், அடையகருங்குளம் ஊராட்சி துணை தலைவர் மதன கிருஷ்ணன், அண்ணா தொழிற் சங்க செயலாளர் கைக்கொண்டார், முன்னாள் அரசு வழக்கறிஞர் கோமதி சங்கர், நகராட்சி கவுன்சிலர் சிவகுமார், வார்டு செயலாளர் ராஜா, கிளை செயலாளர்கள் வெங்கடாசாமி, முன்னாள் ஊராட்சி தலைவர் ராமன், கவுதமபுரி கணேசன், கசமுத்து, பந்தல் ராமர், ஆறுமுகப்பட்டி செல்லசாமி, ரமேஷ், முத்துராமன், இசக்கிமுத்து சிவகுமார், நாராயணன், முருகன், இளைஞர் அணி செயலாளர் சண்மு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
புறநகர் மாவட்ட செயலராக இசக்கி சுப்பையா எம்எல்ஏ நியமனம் சிவந்திபுரத்தில் அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
previous post