புனே: மகாராஷ்டிரா மாநிலம், புனேவை சேர்ந்த பாஜ தொண்டர் மயூர் முண்டே(37). இவர் பிரதமர் மோடிக்காக அன்த் என்ற இடத்தில் சிறிய கோயில் ஒன்றை கட்டி உள்ளார். இந்த கோயிலில் பிரதமர் மோடியின் மார்பளவு சிலை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மயூர் முண்டே கூறுகையில்,‘‘பிரதமராக பதவியேற்றபின் மோடி பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகிறார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் நபருக்காக நான் கோயில் கட்ட வேண்டும் என்று விரும்பினேன். எனவே தான் இந்த கோயிலை அமைத்துள்ளேன்” என்றார்….