Monday, May 20, 2024
Home » புதுச்சேரி- காய்கறி விதைகளுக்கு 50 சதவீத மானியம்

புதுச்சேரி- காய்கறி விதைகளுக்கு 50 சதவீத மானியம்

by kannappan

மானியம்விவசாயிகளுக்கு காய்கறி விதைகளை 50 சதவீத மானியத்தில் வழங்க நடவடிக்கை எடுக்க்ப்பட்டுள்ளது. புதுச்சேரி பட்ஜெட் கூட்டத் தொடரில் வெளியான இந்த அறிவிப்பு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் உள்ள பொதுமக்கள் தங்கள் வீட்டின் மாடியில் “என் வீடு என் நிலம் என்ற திட்டத்தின் கீழ் ரூ.5 ஆயிரம் மதிப்பிலான தோட்டக்கலை இடுபொருட்கள், விதைகள், நாற்றுகள், தோட்டக்கலை கருவிகள், நிழல் வலை ஆகியவை அடங்கிய தொகுப்பு 15 முதல் 30 உறுப்பினர்கள் கொண்ட குழுவிற்கு வழங்கப்படும். இந்த தொகுப்பு  கூட்டுறவு நிறுவனமான பாசிக் மூலம் வழங்கப்படும். தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யும் பரப்பளவை அதிகரிக்கவும், விவசாயிகள் காய்கறி சாகுபடி செய்வதை ஊக்குவிக்கவும் பன்முக வேளாண்மை வாயிலாக ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், காய்கறி விதைகளை 50 சதவீத மானியத்தில் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டில் வேளாண் துறைக்காக ரூ.137.54 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாயத்தின் வளர்ச்சிக்கு என்ன திட்டங்களைக் கொண்டுவர வேண்டுமோ, அந்த திட்டங்களை புதுச்சேரி அரசு கொண்டு வரும். குறைந்த நிலப்பரப்பில் அதிக விளைச்சலையும், வருமானத்தையும் தரக்கூடிய வகையில் வேளாண்மை செய்வது குறித்து பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலையம் மூலம் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும். 2022ம் ஆண்டிற் கான விவசாயக் கடன் சுமார் ரூ.13.8 கோடி தள்ளுபடி செய்யப்படும். லிங்காரெட்டிபாளையத்தில் நன்றாக இயங்கிக்கொண்டிருந்த கூட்டுறவு சர்க்கரை ஆலை தற்போது மூடப்பட்டிருக்கிறது. அதனை அரசு மட்டுமே நடத்துவது சற்று சிரமம். எனவே அங்கு எத்தனால் தயாரிக்கும் வகையில் தனியார் பங்களிப்புடன் கூட்டுறவு சர்க்கரை ஆலையை விரைவில் இயக்கு வதற்கான நடவடிக்கையை அரசு எடுக்கும். அவ்வாறு இயக்கப்படும்போது விவசாயிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். அங்குள்ள பகுதிகள் வளர்ச்சியடைவதற்கு வாய்ப்பாக இருக்கும். புதுச்சேரியில் ஆர்வமுள்ள பொதுப்பிரிவு விவசாயிகளுக்கு 25 சதவீத மானியத்திலும், அட்டவணை பிரிவு விவசாயிகளுக்கு 33 சதவீத மானியத்திலும் கறவை பசுக்கள் வழங்கப்படும். கால்நடை பராமரிப்பை வலுப்படுத்த 500 பால் உற்பத்தியாளர்களுக்கு கால்நடை துறை மூலம் பயிற்சி வழங்கப்படும். புதுவை அரியூர் பகுதியில் ரூ.1.90 கோடி மதிப்பில் பால் பண்ணை அமைக்கப்படும். புதுச்சேரி மத்திய கூட்டுறவு நிலவள வங்கியின் நிதி உதவி மூலம் திசுவளர்ப்பு, தோட்டக்கலை, விவசாய பொருள் பதனிடுதல், மூலிகைச் செடி வளர்ப்பு, உயிரி தொழில்நுட்பம், மீன் வளர்ப்பு ஆகிய விவசாய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும். இதுபோன்ற பல திட்டங்களை முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.http://agri.py.gov.in/தொகுப்பு: அ.உ.வீரமணி

You may also like

Leave a Comment

eleven + 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi