புதுக்கோட்டை, ஜூன் 2: புதுக்கோட்டையில், பிரதோஷ விழாவையொட்டி கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. புதுக்கோட்டை சாந்தநாதசுவாமி திருக்கோயிலில் பிரதோஷ வழிபாடு விமரிசையாக நடைபெற்றது அபிஷேகம் மகாதீப ஆராதனையும் நடைபெற்றது. புதுக்கோட்டை வேதநாயகி உடனுறை சாந்தநாத சுவாமிக்கு பிரதோஷ விழாவையொட்டி பால், தயிர், இளநீர், தேன், சந்தனம், மஞ்சள்நீர், திருநீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டது.
நந்திகேஸ்வரருக்கு பாலபிஷேகம், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் சந்தனம், மஞ்சள் நீர், திருநீர் உள்ளிட்ட பூஜை பொருட்களில் சிறப்பு அபிஷேகம், கலசாபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடந்தது. பின்னர் நந்திகேஸ்வரர் பகவானுக்கு மகாதீபாராதனை நடைபெற்றது. மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் வருகைதந்து சுவாமியை தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை பிரதோஷ வழிபாட்டு மன்ற அமைப்பாளர் மல்லிகாவெங்கட்ராமன், கோவில் நிர்வாகிகள், கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர்.