காஞ்சிபுரம்: பிரபல ரவுடி படப்பை குணா மனைவி எல்லம்மாளை சுங்குவார்சத்திரம் போலீசார் கைது செய்தனர். சென்னையை அடுத்து மதுராமங்கலத்தைச் சேர்ந்த மேலும் 5 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன்பு பாஜக மூத்த தலைவர் பொன்ராதாகிருஷ்ணன் முன்னிலையில் எல்லம்மாளுக்கு அவர் சால்வை அணிவித்தது சர்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது சுங்குவார்சத்திரம் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த பிரபல கூலிப்படை கும்பல் தலைவன் படப்பை குணாவின் மனைவியும் ஒன்றிய கவுன்சிலரான எல்லம்மாளை காஞ்சிபுரம் மாவட்ட ரவுடிகள் ஒழிப்பு பிரிவு தனிப்படை போலீசார் தற்போது அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட ரவுடி படப்பை குணாவின் மீது 8 கொலை வழக்குகள் உட்பட 42 வழக்குகள் நிலுவையில் உள்ளன. பாஜக மூத்த தலைவர் பொன்ராதாகிருஷ்ணன் முன்னிலையில் எல்லம்மாள் பாஜகவில் இணைந்தார் மேலும் படப்பை குணாவும் பாஜகவில் இணைய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் படப்பை குணாவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்….