மாமல்லபுரம்: வடக்கு மாமல்லபுரம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் சரவணன் (எ) கராத்தே சரவணன் (40). பிரபல ரவுடி. இவர், மீது மாமல்லபுரம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி, கொள்ளை, வழிப்பறி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன் சரவணன், மாமல்லபுரம் அடுத்த வடகடம்பாடி பகுதியில் கட்டுமான பொருட்கள் விற்பனையாளரிடம், ₹5 லட்சம் கேட்டு கடத்தினார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, சரவணனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், மாமல்லபுரம் டிஎஸ்பி ஜகதீஸ்வரன், மாமல்லபுரம் இன்ஸ்பெக்டர் மணிமாறன் ஆகியோர் சரவணனை, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என எஸ்பி அரவிந்தனுக்கு கேட்டுக் கொண்டனர். அதன்பேரில் எஸ்பி அரவிந்தன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் ராகுல்நாத், சரவணனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்….
பிரபல ரவுடிக்கு குண்டாஸ்
previous post