திருவெறும்பூர், டிச.12: திருவெறும்பூர் அருகே சோழமாதேவியில் ஆயிரம் ஆண்டு பழமையான வரலாற்றுப் புகழ்மிக்க கைலாயமுடையார் சிவன் ஆலயத்தில் பிரதோஷ சிறப்பு பூஜை நேற்று நடைபெற்றது. இதில் முதலில் நந்தியம் பெருமானுக்கு அபிஷேகம் நடைபெற்றது.
அப்போது நந்தியபெருமானுக்கு பால், பன்னீா், சந்தனம், இளநீா், விபூதி, திரவிய பொடி உள்ளிட்ட 16 வகையான அபிஷேகம் நடைபெற்றது. மேலும் எறும்பீஸ்வரர், நெடுங்களநாதர், சோளீஸ்வரர், போலீஸ் காலனி ரத்தினகிரீஸ்வரர்,துப்பாக்கி தொழிற்சாலை அருகே பட்டவெளி கிராமத்தின் பொன்னீஸ்வரர் ஆகிய கோவில்களிலும் பிரதோஷ சிறப்பு பூஜை நடைபெற்றது.