விருதுநகர் புல்லலக்கோட்டை ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் விருதுநகர் நகராட்சி அதிமுக வேட்பாளர்கள் கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் விஜயகுமரன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுகையில், “நகரில் நடந்த சாதனைகளை ஒவ்வொரு வாக்காளரை பார்த்து கூறி ஓட்டு கேட்க வேண்டும். மேளதாளத்துடன் போனால் ஓட்டு போட்ட காலம் இப்போது இல்லை. பெண் வேட்பாளர்கள் ஒவ்வொரு வீடுகளிலும் அடுப்பங்கரை வரை நுழைந்து ஓட்டு கேளுங்கள். பிரச்னைகள் எதுவாக இருந்தாலும் சந்திக்க, தீர்க்க நாங்கள் தயாராக இருக்கிறோம். துணிந்து பிரசாரம் செய்யுங்கள்’’ என்று பேசினார்….