தஞ்சாவூர், ஏப்.16:தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள பிரகதீஸ்வரர் சித்திரை தேர்த்திருவிழாவினை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தேரோட்டத்தன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இவ்வாண்டு கொண்டாடப்படவுள்ள சித்திரை தேர்த்திருவிழாவினை முன்னிட்டு வரும் 20ம் தேதி (சனிக்கிழமை) அன்று ஒருநாள் மட்டும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது என தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.
பிரகதீஸ்வரர் கோயில் தேர்திருவிழா தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 20ம்தேதி உள்ளூர் விடுமுறை
previous post