நெல்லை: பாளையங்கோட்டை மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என சுமார் 1400 பேர் உள்ளனர். இவர்களின் பாதுகாப்பிற்காக சிறை கண்காணிப்பாளர் தலைமையின் கீழ் கூடுதல் சிறை கண்காணிப்பாளர் இருவர், வார்டன்கள் 420 பேர் உள்ளனர். இவர்கள் 3 சிப்ட்களாக பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பாளை. மத்திய சிறையில் மாநகர போலீசார் மற்றும் சிறை வார்டன்கள், உளவுத்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது கைதிகளிடம் இருந்து செல்போன், சிம்கார்டு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடத்த தமிழக சிறைத்துறை டிஜிபி அம்ரேஸ் பூஜாரி, சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.இதைத் ெதாடர்ந்து சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில், கைதிகளுக்கு சிறைத்துறை ஊழியர்கள் சிலரே உடந்தையாக இருந்து செல்போன், சிம்கார்டு வழங்கியது தெரியவந்தது. இந்நிலையில் தென்மண்டல சிறைத்துறை டிஐஜி பழனி உத்தரவின் பேரில், பாளை சிறை வார்டன் அருண்பாண்டியன் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்….