அரூர், டிச.17: மொரப்பூர் அருகே உள்ள நவலை ஊராட்சி சின்னாகவுண்டம்பட்டியில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்திற்கு ₹18 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்ட பூமிபூஜை நடந்தது. ஒன்றிய திமுக செயலாளர் செங்கண்ணன் பணிகளை துவக்கி வைத்தார். இதில் முல்லை கோபால், ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயந்தி அழகரசு, துணைத்தலைவர் தமிழ்செல்வன், சுரேஷ், லோகேஸ், சங்கர், முரளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பால் கூட்டுறவு சங்க கட்டுமான பணி
previous post