சிவகங்கை, மார்ச் 8: சிவகங்கை பாரத ஸ்டேட் வங்கி முன்பு காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேர்தல் பத்திரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு கால அவகாசம் கேட்ட பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகத்தைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத்தலைவர் சஞ்சய்காந்தி தலைமை வகித்தார். சிவகங்கை எம்பி கார்த்திக் ப.சிதம்பரம் கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் காரைக்குடி எம்எல்ஏ மாங்குடி, முன்னாள் மாவட்டத்தலைவர் ராஜரெத்தினம், மகளிர் காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் ஸ்ரீவித்யாகணபதி, நகரத்தலைவர்கள் விஜயகுமார், நடராஜன், புருஷோத்தமன், சஞ்சய், பாண்டிமெய்யப்பன், மாவட்ட துணைத்தலைவர்கள் சண்முகராஜன், உடையார், மாவட்ட பொது செயலாளர் மோகன்ராஜ், நகர்மன்ற உறுப்பினர்கள் மகேஸ்குமார், பிரியங்கா, வட்டாரத்தலைவர் மதியழகன், ஆகியோர் பங்கேற்றனர்.