அண்ணாநகர்: அரும்பாக்கம், எம்எம்டிஏ காலனியை சேர்ந்தவர் ஸ்ரீநாத் (29), தனியார் கம்பெனி ஊழியர். இவரது மனைவி கவிதா (26). இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகளும், ஒரு வயதில் விஷிகா என்ற குழந்தையும் இருந்தது. நேற்று முன்தினம் இரவு வீட்டின் பாத்ரூமில் இருந்த பக்கெட் தண்ணீரில் விஷிகா விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராதவிதமாக வழுக்கி விழுந்ததில், குழந்தை தலையில் பலத்த ஏற்பட்டு அலறி துடித்தது. சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர் குழந்தையை மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை விஷிகா பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து அரும்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது….
பாத்ரூமில் வழுக்கி விழுந்த பச்சிளம் குழந்தை பலி
previous post