அண்டை நாடான பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தானில் லோராலியாவில் இருந்து சோப் நகருக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு வேன் ஒன்று புறப்பட்டு சென்றது. அக்தர்சாய் மலைப்பகுதியில் உள்ள வளைவில் திரும்பும் போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், ஆயிரத்து 572 மீ. உயர மலைச்சாலையில் இருந்து பள்ளத்தில் உருண்டு விழுந்தது. இந்த கோர விபத்தில் வேனில் பயணித்த 22 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.