திருமங்கலம், பிப். 4: திருமங்கலம் பஸ் ஸ்டாண்டில் இறந்து கிடந்த முதியவரின் உடலை மீட்டு டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.திருமங்கலம் பஸ் ஸ்டாண்ட் கழிப்பறை செல்லும் பகுதியில் 65 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து கிடப்பதாக மறவன்குளம் விஏஓ ஆனந்திற்கு தகவல் வந்தது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற விஏஓ உயிரிழந்தவர் குறித்து திருமங்கலம் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் பஸ் ஸ்டாண்டிற்கு சென்று உடலை கைப்பற்றி அரசுமருத்துவமனைக்கு அனுப்பிவைத்து உயிரிழந்தது யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
பஸ் ஸ்டாண்டில்இறந்து கிடந்த முதியவர் உடல் மீட்பு
previous post