ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே குன்னூர் கிராமத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரின் மனைவி தங்கம்(48). இவர் ஒரு குற்ற வழக்கிற்காக க.விலக்கு போலீசாரால் கைது செய்யப்பட்டு நேற்று முன்தினம் மருத்துவ பரிசோதனைக்காக ஆண்டிபட்டி அரசு மருத்துவமனைக்கு க.விலக்கு போலீசார் பஸ்சில் அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை பெற்று, கொரோனா பரிசோதனைக்காக க.விலக்கு அரசு மருத்துவமனைக்கு பஸ்சில் அழைத்து சென்றனர். அப்போது பஸ் ஆண்டிபட்டி இபி ஆபிஸ் அருகே சென்று கொண்டிருந்தபோது, போலீசார் தடுத்தும் தங்கம் ஓடும் பஸ்சில் இருந்து குதித்ததாக கூறப்படுகிறது. இதனால் தங்கம் தலையில் பலத்த காயம் அடைந்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.