உடுமலை, ஜூன் 19: மடத்துக்குளம் வட்டம் துங்காவி முதல் கோட்டமங்கலம் செல்லும் சாலை மிகுந்த பழுதடைந்த நிலையில் உள்ளது. இச்சாலை வழியாக எண்ணற்ற கனரக வாகனங்கள், சரக்கு வாகனங்கள், விவசாயிகள் இடுபொருள் எடுத்துச் செல்லும் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் தினந்தோறும் சென்று வருகின்றன. இதுபற்றி அதிகாரிகளுக்கு பலமுறை தகவல் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் துங்காவி கிராம மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். இது சம்பந்தமாக துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.