திருப்புத்தூர், ஏப்.10: திருப்புத்தூர் அருகே மானகிரியில் உள்ள சத்ய பார்த்தி மழலையர் மற்றும் தொடக்க பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு, திருப்புத்தூர் ஆறுமுகம் பிள்ளை சீதை அம்மாள் கல்லூரியின் பேராசிரியர் மரியரத்தினம் தலைமை வகித்தார். கோவிலூர் அரசு உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ராமர் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் பாக்கியலட்சுமி வரவேற்றார்.
விழாவில், மாணவ,மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் நாடகங்கள் நடைபெற்றது. மாணவ,மாணவிகளுக்கு பள்ளியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணக்குமார் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கினார். நிகழ்ச்சியில், ஓய்வு பெற்ற ஏஇஓ ரெங்கசாமி, பள்ளியின் பகுதி ஒருங்கிணைப்பாளர் தனபால், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் லூர்து மேரி, கண்ணம்மாள் மற்றும் மாணவ,மாணவிகள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.