பாடாலூர், செப். 28: அரியலூர் குபேரன் நகர் பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி மனைவி சுபாஷினி (37). இவர் ஆலத்தூர் தாலுகா ராமலிங்கபுரம் அரசு நடுநிலைப் பள்ளியில் அறிவியல் பட்டதாரி ஆசிரியயைாக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று காலை பள்ளிக்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்றார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் மாஸ்க் அணிந்து கொண்டு இருவர் இவரை பின்தொடர்ந்து வந்து பாலம்பாடி பகுதியில் இவர் அணிந்து இருந்த 5 பவுன் தாலி செயினை பறித்துச் சென்றனர். இது குறித்து சுபாஷினி குன்னம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.