Thursday, May 9, 2024
Home » பல்லடம் 4 பேர் கொலை வழக்கில் திருப்பூர் நீதிமன்றத்தில் 5 பேர் ஆஜர்

பல்லடம் 4 பேர் கொலை வழக்கில் திருப்பூர் நீதிமன்றத்தில் 5 பேர் ஆஜர்

by Ranjith

 

திருப்பூர், மார்ச்19:திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறில் கடந்த செப்டம்பர் மாதம் 3-ம் தேதி மாலை ஒரே குடும்பத்தை சேர்ந்த மோகன்ராஜ் (49) அவரதுச் சகோதரர் செந்தில்குமார்(46), தாய் புஷ்பவதி(68) மற்றும் சித்தி ரத்தினாம்பாள் (59) ஆகிய 4 பேர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக வெங்கடேஷ் (27),அவரது தந்தை ஐயப்பன்(52), நண்பர்களான விஷால் (எ) சோனைமுத்து (22) மற்றும் செல்லமுத்து(24) மற்றும் வெங்கடேஷின் அண்ணன் செல்வம் (30) உள்ளிட்ட 5 பேரை பல்லடம் போலீசார் கைது செய்தனர்.

மேலும், 800 பக்கத்துக்கு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.இதில் நீதிபதி ஸ்வர்ணம் ஜெ.நடராஜன் முன்னிலையில் 5 பேரையும் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கு விசாரணை நேற்று முதல் வரும் 22-ம் தேதி தொடர்ந்து 5 நாட்கள் எடுத்து விசாரிக்க உள்ளனர்.நேற்று சாட்சியங்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் திருப்பூர் மாவட்ட குற்றத்துறை அரசு வழக்கறிஞர் கனகசபாபதி ஆஜரானார்.

You may also like

Leave a Comment

11 − one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi