Monday, May 20, 2024
Home » பல்லடம் அருகே சம்பள பாக்கி கேட்ட தந்தை, மகனுக்கு அடி-உதை

பல்லடம் அருகே சம்பள பாக்கி கேட்ட தந்தை, மகனுக்கு அடி-உதை

by Ranjith

பல்லடம், ஏப்.12: பல்லடம் அருகேயுள்ள வேலப்பகவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் ஆறுச்சாமி (60). இவரது மகன் திருமூர்த்தி (30). இவர் அதே ஊரைச் சேர்ந்த சதீஷ் என்பவரின் பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த 2 மாதங்களாக சம்பள பாக்கி இருந்துள்ளது. எனவே சம்பள பாக்கியை கேட்பதற்காக சதீஷின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு இது குறித்து வாக்குவாதம் ஏற்படும் போது சதீஷின் உறவினரான பாலசுப்பிரமணியம் ஆறுச்சாமி மற்றும் திருமூர்த்தி ஆகியோரை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார்.

இதில் ஆறுச்சாமியின் இடது கை முறிவு ஏற்பட்டுள்ளது. திருமூர்த்திக்கு தலையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவர்களை விலக்கி விட இருவரும் உடனடியாக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து புகாரின் பேரில் காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

You may also like

Leave a Comment

five × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi