அந்தியூர்: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ளது பர்கூர் மலைப்பகுதியில் கோயில்நத்தம் அருகே உள்ள ஒங்கேபள்ளத்தில் நேற்று பர்கூர் வனச்சரகர் மணிகண்டன் தலைமையில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெண் யானை ஒன்று இறந்து கிடந்தது தெரியவந்தது. மாவட்ட வன அலுவலர் கௌதம் உத்தரவின்பேரில், பர்கூர் அரசு கால்நடை மருத்துவர் உடற்கூறு ஆய்வு செய்தார். இதில் இறந்தது 40 வயது மதிக்கத்தக்க பெண் யானை எனவும், வயது முதிர்வின் காரணமாக நிலை தடுமாறி கிழே விழுந்து இறந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர் யானையின் உடல் மற்ற வன விலங்குகளுக்கு உணவாக விடப்பட்டது….
பர்கூர் வனப்பகுதியில் கீழே விழுந்த பெண் யானை பலி
previous post