பரமக்குடி: பரமக்குடியில் இருந்து திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு பக்தர்கள் சைக்கிள் யாத்திரை சென்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் சக்தி குமரன் செந்தில் ஆலயம் உள்ளது. ஆண்டுதோறும் இங்கிருந்து திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு பக்தர்கள் சைக்கிள் யாத்திரை மேற்கொள்வது வழக்கம். இந்த ஆண்டு மாசி மக பால்குட பெருவிழாவை முன்னிட்டு 48ம் ஆண்டாக சைக்கிள் யாத்திரை சென்றனர். சுமார் 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் சைக்கிளில் யாத்திரை சென்றனர். குருசாமி இலக்குமணன் தலைமையில் சைக்கிள் பயணம் தொடங்கியது. முன்னதாக முருகனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
பரமக்குடியில் இருந்து திருச்செந்தூருக்கு பக்தர்கள் சைக்கிள் யாத்திரை
previous post