திருச்சி, ஏப்.23: பெரம்பலூர் மாவட்டம் அயனாபுரம் பகுதியை சேர்ந்தவர் சூரியபிரகாசம்(38). சம்பவத்தன்று காலை இவர் சொந்த வேலை நிமித்தமாக திருச்சி திருவானைக்காவல் அழகிரிபுரம் பகுதியில் இருந்து டவுன் பஸ்சில் பயணம் செய்தார். அப்போது அவர் பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.500ஜ மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். அதிர்ச்சியடைந்த சூரியபிரகாசம் இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிந்து விசாரணை செய்ததில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சோந்த கோவிந்தராஜ்(45) மற்றும் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்த ஸ்ரீநிவாசன்(50) என்பது தெரியவந்து, இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சமயபுரம், ஏப்.26:சமயபுரம் கோயிலில் சித்திரை திருவிழாவின் 8ம் நாளான நேற்று தங்க கமல வாகனத்தில் அம்மன் வீதியுலா நடந்தது. சக்தி ஸ்தலங்களில் முதன்மையாக விளங்கும் சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரைப் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். தேரோட்டம் 18ம்தேதி வெகு விமரிசையாக நடந்தது.
லட்சக்கணக்கில் பக்தர்கள் திரண்டு அம்மனின் அருள் பெற்று சென்றனர்.இந்த நிலையில் சித்திரை திருவிழாரின் 8ம் நாளான நேற்று மாலை தங்க கமல வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. முன்னதாக உற்சவ அம்பாளுக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், உள்ளிட்ட அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பிறகு தங்க கமல வாகனத்தில் அம்பாள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு திருவீதி உலாவில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசித்து சென்றனர்.விழா ஏற்பாடுகளை உபயதாரர் குழு தலைவர் மணிகண்டன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.