சிவகாசி, ஜூன் 15: சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி முதுகலை தமிழ் துறை, டெல்லி கலை இலக்கிய பேரவை, சிங்கப்பூர் தமிழ் இலக்கியக் களம், நியூசிலாந்து முத்தமிழ் சங்கம், யாதவர் மகளிர் கல்லூரி தமிழ் துறை, தேனி நாடார் சரஸ்வதி கலை அறிவியல் கல்லூரி தமிழ் துறை சார்பில் பன்னாட்டு ஆய்வரங்கம் நடந்தது.
கல்லூரி முதல்வர் அசோக் தலைமை வகித்தார். முதுகலை தமிழ் துறை தலைவர் சிவனேசன் துவக்கி வைத்தார். இளநிலை தமிழ் துறை தலைவர் அருள்மொழி முன்னிலை வகித்தார். மாணவி செல்வி வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ்செல்வன் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். மதுரை யாதவர் கல்லூரி தமிழ் துறை உதவி பேராசிரியர் சத்யபாமா பேசினார். மாணவி உமா ரமணி நன்றி கூறினார். மாணவி நாராயணி தொகுத்து வழங்கினார்.