திருப்பூர், ஏப்.17: தேனி மாவட்டம், சீளையம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (28). இவருக்கு திருமணம் ஆகவில்லை. பாலாஜி கடந்த 4 ஆண்டுக்கு முன்பு திருப்பூர் வந்து பங்களா ஸ்டாப் பகுதியில் உள்ள பனியன் நிறுவனம் ஒன்றில் தங்கி கட்டிங் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் பாலாஜி கம்பெனியின் அறைக்கு தூங்குவதற்காக சென்று உள்ளார்.
பின்னர் மறுநாள் காலை நீண்ட நேரம் ஆகியும் கதவை திறக்காததால் சக பணியாளர்கள் சென்று பார்த்துள்ளனர். அப்போது பாலாஜி அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடக்கு போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.