சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக, வெளிநாடுகளிலிருந்து வீரர், வீராங்கனைகள் சென்னைக்கு விமானம் மூலம் வந்த வண்ணம் உள்ளனர். இவர்களை, தமிழக அரசு சார்பில் நியமித்த அதிகாரிகள் குழுவினர் சிறப்பு பேருந்துகள் மூலம் தங்கும் விடுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். இன்றைய தினம், பல்வேறு வீரர்கள் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில், 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க உள்ள பனாமா நாட்டின் வீரர்களின் குழுவின் கேப்டன் நேற்று மதியம் மாமல்லபுரம் நுழைவு வாயில் அருகே உள்ள கிராண்ட் பே தனியார் ரிசார்ட்டுக்கு வருகை தந்தார். அப்போது, அங்குள்ள ஊழியர்கள் அவரை தமிழர் மரபுபடி வரவேற்றனர்….