Friday, May 10, 2024
Home » பந்தலூரில் கலைஞர் நினைவு தினம் உருவ படத்திற்கு திமுகவினர் மரியாதை

பந்தலூரில் கலைஞர் நினைவு தினம் உருவ படத்திற்கு திமுகவினர் மரியாதை

by Ranjith

 

பந்தலூர், ஆக.8: பந்தலூரில் கலைஞரின் நினைவு தினத்தை முன்னிட்டு திமுக சார்பில் அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நீலகிரி மாவட்டம், பந்தலூரில் நெல்லியாளம் நகர திமுக சார்பில் நேற்று கலைஞரின் நினைவு தினத்தை முன்னிட்டு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். நகர செயலாளர் சேகர் தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ திராவிட மணி முன்னிலை வகித்தார்.

மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் ஆலன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் முரளிதரன், நகர நிர்வாகிகள் பொன்ராஜ், சிவசுப்பிரமணியம், ஷீலா, செல்வகுமார், மாவட்ட பிரதிநிதிகள் ராமச்சந்திரன், குமார் மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள் சேகர், ஜெயசீலன், மூர்த்தி, ஞானசேகர், இன்பராஜ், அசரப், ஆசைத்தம்பி, பன்னீர்செல்வம், பாலா, எல்பிஎப் தலைவர் மாடசாமி, மகேந்திரன், சந்திரகுமார், நகராட்சி தலைவர் சிவகாமி, துணை தலைவர் நாகராஜ், வார்டு நிர்வாகிகள் மயில்வாகனன், மோகன்ராஜ், முகம்மது, தில்லைநாதன், மோகன், சுப்பிரமணி, மஞ்சு, ஆனந்த், சுனீர்பாபு, ரவி மற்றும் மகளிர் அணி உள்ளிட்ட அனைத்து அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முடிவில் வார்டு செயலாளர் பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்தார். மேலும் கலைஞரின் நினைவு தினம் நெல்லியாளம் நகராட்சிக்கு உட்பட்ட தேவாலா, நாடுகாணி, ஆமைக்குளம், குடோன், அத்திக்குன்னு, உப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது.

You may also like

Leave a Comment

two + 19 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi