வருசநாடு, ஆக. 15: வருசநாடு பகுதியில் ஆடி அமாவாசை திருநாளை முன்னிட்டு பதுக்கல் மது பாட்டில் விற்பனையை ஒழிப்பதற்காக போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று வருசநாடு உப்புத்துறை மலையடிவாரத்தில் சந்தேகத்துக்கிடமாக ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரிடம் கடமலைக்குண்டு எஸ்.ஐ வரதராஜ் தலைமையான போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார்.
இதையடுத்து அவரிடம் இருந்த கைப்பையை சோதனை செய்ததில், அதில் 90 மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. விவசாரணையில் அவர் தங்கம்மாள்புரத்தை சேர்ந்த சேகர் (40) என்பது உறுதியானது. அவர் மதுபாட்டில்களை வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதும் உறுதியானது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சேகரை கைது செய்தனர். அவரிடம் இருந்த மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.