சென்னை: சென்னை கிழக்கு கடற்கரை சாலை, கானத்தூர் ராதாகிருஷ்ணா அவென்யூ,
எல்.ஆர்.பார்ம்ஸ் சாலையில் உள்ள சுகுணா கார்டன் என்கிற பண்ணை வீட்டில்
கடந்த சனிக்கிழமை இரவு, மது போதையில் ஆண்கள், பெண்கள் குத்தாட்டம்
போடுவதாக கானத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது. இகுகுறித்து
தகவலின்பேரில், கானத்தூர் போலீசார் சென்றபோது பார்ட்டி
நடைபெற்றுக்கொண்டிருந்தது. அங்கு, பெண்கள் மதுபோதையில் அரைகுறை ஆடைகளுடன்,
ஆண்களோடு சேர்ந்து நடனமாடி கொண்டிருந்தனர். போலீசார் விசாரணை நடத்தியதில்,
அங்கிருந்த பெண் ஒருவர்தான் சினிமா நடிகை கவிதா ஸ்ரீ என்றும் ராமாபுரத்தை
சேர்ந்த ஸ்ரீஜித்குமார்(34) என்பவருடன் இணைந்து இந்த இரவு நேர மது விருந்து
பார்ட்டியை ஏற்பாடு செய்ததும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து
போலீசார் இந்த பார்ட்டியில் நடனமாடிய பெண்களை மட்டும் நடிகை கவிதா ஸ்ரீ
உடன் சேர்த்து மொத்தம் 16 பேரையும் எச்சரிக்கை செய்து பண்ணை வீட்டிலிருந்து
அனுப்பி உள்ளனர். அதேநேரத்தில், இந்த பார்ட்டியில் கலந்து கொள்ள ஆண்
ஒருவருக்கு ரூ.5000 கட்டணம் வசூலித்ததும் விசாரணையில் தெரிய வந்தது.
பின்னர், அங்கிருந்த ஸ்ரீஜித்குமார் உள்ளிட்ட 15 பேரையும் போலீசார் காவல்
நிலையம் அழைத்து வந்து அவர்கள் மீது ஊரடங்கின்போது அரசு உத்தரவை
மீறியதாகவும், சட்டத்திற்கு புறம்பாக பன்ணை வீட்டில் மது விருந்து
நடத்தியது என 4 வழக்குகள் பதியபட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து கானத்தூர்
கிராம நிர்வாக அதிகாரி கலைச்செல்விக்கு தகவல் கொடுக்கப்பட்டதன்பேரில் சம்பவ
இடத்திற்கு சென்ற கிராம நிர்வாக அதிகாரி நேற்று பன்ணை வீட்டை பூட்டி சீல்
வைத்தார்….