Friday, May 17, 2024
Home » பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் பயணிகள் அமர்வதற்கு பெஞ்சின் மேல் பகுதி பொருத்தம்

பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் பயணிகள் அமர்வதற்கு பெஞ்சின் மேல் பகுதி பொருத்தம்

by Mahaprabhu

பட்டுக்கோட்டை, ஏப்.3: தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் நிலைய அதிகாரி அறைக்கு எதிரே பயணிகள் அமருவதற்கு வசதியாக 2 கிரானைட் பெஞ்சுகள் இருந்தன. கடந்த பல நாட்களாகவே பெஞ்சின்மேல்பகுதி மட்டும் அப்புறப்படுத்தப்பட்டிருந்தது. பயணிகள் உட்காருவதற்கு போதிய இருக்கைகள் இல்லாமல் அவதிக்குள்ளாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு வந்தது. இதனால் பயணிகள் தாங்கள் கொண்டு வரக்கூடிய பொருட்கள் மற்றும் அழைத்து வரக்கூடிய குழந்தைகளோடு நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ரயில் வருவதற்கு தாமதம் ஏற்பட்டாலும் அவ்வளவு நேரமும் நிற்க வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டது.

எனவே ரயில் பயணிகளின் நலன் கருதி அப்புறப்படுத்தப்பட்ட பெஞ்சின் மேல் பகுதியை உடனடியாக பொருத்த வேண்டும் என நேற்று முன்தினம் தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி பிரசுரமானது. இதன் எதிரொலியாக ரயில்வே நிர்வாகம் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்ட பெஞ்சின் மேல் பகுதியை நேற்று பொருத்தியது. இது குறித்து ரயில் பயணிகள் கூறுகையில், அப்புறப்படுத்தப்பட்ட பெஞ்சின் மேல்பகுதியை உடனடியாக பொருத்திய ரயில்வே நிர்வாகத்திற்கும், படத்துடன் செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கும் ரயில் பயணிகள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர்.

You may also like

Leave a Comment

one × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi