பட்டிவீரன்பட்டி, மே 23: பட்டிவீரன்பட்டி அருகே தகராறை விலக்கி விட்ட மாமியாரை கத்தியால் குத்திய மருமகனை போலீசார் கைது செய்தனர். பட்டிவீரன்பட்டி அருகே நெல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்துச்சாமி (31). இவரது மனைவி சூர்யா (25). தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 2 தினங்களுக்கு முன்பு தம்பதி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த முத்துச்சாமி, மனைவியை சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதை தடுக்க முயன்ற சூர்யாவின் தாய் மகாலட்சுமியை கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துச்சாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.