நாமக்கல், ஏப்.14: நாமக்கல் அருகே உள்ள அணியாபுரத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (38). இவர் மோகனூரில் கார் பட்டறை வைத்துள்ளார். இவர் தனது பட்டறைக்கு பழுது நீக்க வந்த ஆம்னி வேனை, கடந்த 10ம் தேதி, வழக்கம்போல் பட்டறையின் முன்பு நிறுத்தி விட்டு சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்த போது, வேனை காணவில்லை. இதுகுறித்து பாலசுப்பிரமணியம் அளித்த புகாரின் பேரில், நாமக்கல் போலீசார் வழக்குபதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பட்டறையில் வேன் திருட்டு
previous post