Sunday, June 16, 2024
Home » பட்டப்பகலில் மூதாட்டியிடம் 3 சவரன் பறிப்பு

பட்டப்பகலில் மூதாட்டியிடம் 3 சவரன் பறிப்பு

by kannappan

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பட்டப்பகலில் மூதாட்டியின் கழுத்தி்ல் கிடந்த 3 சவரன் செயினை பைக்கில் வந்த மர்ம நபர்கள் பறித்து சென்றனர். போலீசார் அவர்களை தேடி வருகின்றனர். காஞ்சிபுரம் பாண்டவ பெருமாள் கோவில் வடக்கு மாடவீதியில் வசிப்பவர் யசோதா அம்மாள் (62). இவர் அதே பகுதியில் உள்ள அரசு நியாய விலையில் பொருட்கள் வாங்க நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் தங்கச் செயினை பறித்தனர். இதில் மூதாட்டி கூச்சலிடவே பொதுமக்கள் வருவதற்குள் அங்கிருந்து அந்த நபர்கள் தப்பிச் சென்றனர். புகாரின்படி பெரிய காஞ்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து தப்பி சென்ற நபர்களை தேடி வருகிறார்….

You may also like

Leave a Comment

9 − 7 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi