நெல்லை, ஏப். 27: சீதபற்பநல்லூர் அருகே சிறுக்கன்குறிச்சியை சேர்ந்த பிச்சையா- கலா தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். மீண்டும் கர்ப்ப மான கலாவுக்கு கடந்த 21ம்தேதி நெல்லை அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. கடந்த 2 நாளுக்கு முன் வீடு திரும்பினார். இந்நிலையில் குழந்தையின் உடல் திடீரென ஊதா நிறமாக மாறியது. பின்னர் சிறிது நேரத்தில் குழந்தை, உயிரிழந்துவிட்டது. இதனால் கலா மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கலா அளித்த புகாரின்பேரில், சீதபற்பநல்லூர் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பச்சிளம் குழந்தை மர்மச்சாவு
previous post