Tuesday, May 28, 2024
Home » பசுமை இல்ல வாயுக்கள் வெளியேறுவதை 2030-ம் ஆண்டுக்குள்ளாக 35 சதவீதம் அளவிற்கு குறைத்துக் கொள்ள திட்டம் : மத்திய அரசு அறிவிப்பு!!

பசுமை இல்ல வாயுக்கள் வெளியேறுவதை 2030-ம் ஆண்டுக்குள்ளாக 35 சதவீதம் அளவிற்கு குறைத்துக் கொள்ள திட்டம் : மத்திய அரசு அறிவிப்பு!!

by kannappan

டெல்லி : திராவிட முன்னேற்றக் கழகப் பொருளாளரும், தி.மு.க. நாடாளுமன்ற குழுத் தலைவருமான,         திரு. டி.ஆர்.பாலு, அவர்கள், நேற்று, 23 ஜூலை, 2021, மக்களவையில், அதிகரித்து வரும் பருவநிலை மாறுபாடுகளாலும், தொழிற் மயமாக்கலின் விளைவாகவும், மலேரியா போன்ற பல்வேறு நோய்கள் அதிகரிப்பதை தடுக்க, ஒன்றிய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்னென்ன? என்றும், குழந்தைகளின் இறப்பு விகிதம் குறைவது, உற்பத்தித் திறன் குறைவது, இதய நோய்கள் அதிகரிப்பது போன்றவற்றை தடுக்க, எடுக்கப்பட்ட முயற்சிகள் என்னென்ன? என்றும், மாண்புமிகு ஒன்றிய சுற்றுச் சூழல், காடுகள் மற்றும் பருவநிலை மாற்ற இணையமைச்சர் திரு.அஸ்வினி குமார் சௌபே, அவர்களிடம், விரிவான கேள்வியை எழுப்பினார்.மாண்புமிகு ஒன்றிய சுற்றுச் சூழல், காடுகள் மற்றும் பருவநிலை மாற்ற இணையமைச்சர் அளித்த பதில் பின் வருமாறு:-    தெற்கு ஆசியாவில் உள்ள அனைத்து நாடுகளிலும் உலகளாவிய முறையில், பருவநிலை மாற்றம் நிகழ்ந்து வருவதால், அந்தந்த நாடுகளுக்கு ஏற்ற வகையில் இப்பிரச்சினையை அணுக வேண்டும் என்றும், ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தின் படி, 25 சதவீத அளவிற்கு கரியமில வாயு உமிழ்வை குறைத்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என்றும், பசுமை இல்ல வாயுக்கள் வெளியேறுவதை 2030-ஆம் ஆண்டுக்குள்ளாக 35 சதவீதம் அளவிற்கு குறைத்துக் கொள்ளவும், 40 சதவீத அளவிற்கு மின் சக்தியை எரிசக்தித் தேவைகளுக்கு பயன்படுத்தவும், காடுகளின் நிலப்பரப்பை அதிகரிக்கவும், ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக, இணையமைச்சர் தெரிவித்துள்ளார்.மேலும், சுற்றுச் சூழல், மனித சுகாதாரம், விவசாயம் ஆகியவற்றை பாதிக்கும் அளவிற்கு, புவியின் வெப்பம் 1.5 டிகிரி அளவிற்கு உயர்ந்துள்ளது என்றும், இதனால் நோய்களின் தாக்கம் அதிகரித்துள்ளது என்றும், கோடை காலங்களில் உற்பத்தித் திறன் பாதிக்கிறது என்றும், மாலே நாட்டு ஒப்பந்தப்படி, பருவநிலை மாற்றத்திற்கு தக்கவாறு, சுகாதாரத் துறையில் கொள்கை மாற்றங்கள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்றும், பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் சுகாதார குறைபாடுகளை தடுக்கவும், இறப்பு விகிதத்தைக் குறைக்கவும், தேசிய அளவிலான பருவநிலை மாற்ற திட்டங்கள் 2018-ஆம் ஆண்டு முதலாகவே செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்று, திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர்,  திரு. டி.ஆர்.பாலு, மக்களவையில், எழுப்பிய கேள்விக்கு, மாண்புமிகு சுற்றுச் சூழல், காடுகள் மற்றும் பருவநிலை மாற்ற இணையமைச்சர், திரு.அஸ்வினி குமார் சௌபே அவர்கள், விரிவான பதிலை அளித்துள்ளார்….

You may also like

Leave a Comment

16 − twelve =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi