தண்டையார்பேட்டை: பாரிமுனை மண்ணடி சுப்பு பிள்ளை தெருவை சேர்ந்தவர் குமரேசன்(23). கூலி தொழிலாளி. இவரது மனைவி கலைவாணி(20). இவர்களது ஒன்றரை வயது மகள் இனியாஸ்ரீ. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை வீட்டிலிருந்த குழந்தை திடீரென காணவில்லை. பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. சந்தேகத்தின்பேரில் பாத்ரூம் சென்று பார்த்தபோது அங்கு தண்ணீர் நிரப்பி வைத்திருந்த பக்கெட்டில் தலைகுப்புற குழந்தை விழுந்து இறந்து கிடந்தது. இதை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். தகவலின்பேரில் வடக்கு கடற்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தண்ணீர் பக்கெட்டுக்குள் விழுந்து குழந்தை இறந்த சம்பவம் மண்ணடி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது….