பெரியபாளையம்: பெரியபாளையத்தில் அமைந்துள்ள பவானி அம்மனை வழிபட ஆடிமாதத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். ஆடி மாதம் முதல் வாரம் தொடங்கி 14வாரங்கள் இந்த பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயம் விழா கோலம் பூண்டிருக்கும். ஞாயிற்றுக்கிழமையான திரளான பக்தர்கள் பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டு சென்றனர். செங்கல்பட்டு மாவட்டம் திருக்கச்சூரை சேர்ந்த காந்திமதி (58) என்பவர் வேப்பஞ்சேலை அணிந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்திக் கொண்டிருந்தார். வேப்பஞ்சேலை அணிந்து கோயிலை வலம் வரும் போது காந்திமதி திடீரென மயங்கி விழுந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பெரியபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி காந்திமதி உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரியபாளையம் போலீசார் சடலத்தை திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் காந்திமதி ஏற்கனவே சர்க்கரை வியாதியால் அவதிப்பட்டு வந்த நிலையில் காலையில் உணவருந்தாமல் விரதம் இருந்து நேர்த்திக்கடன் செலுத்தும் போது உடல்நலக் குறைவால் உயிரிழந்தது தெரிய வந்தது….
நேர்த்திக் கடன் செலுத்தியவர் மயங்கி விழுந்து பலி
previous post