Wednesday, June 12, 2024
Home » நெல்லை, தென்காசி மாவட்டங்களில் சூறைக் காற்றால் மின்தடை ஏற்பட்டால் தகவல் தெரிவித்தால் துரித நடவடிக்கை

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் சூறைக் காற்றால் மின்தடை ஏற்பட்டால் தகவல் தெரிவித்தால் துரித நடவடிக்கை

by Karthik Yash

நெல்லை, ஜூலை 28: நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை மற்றும் சூறைக்காற்றால் மின்தடை ஏற்பட்டால் பின்வரும் செல்போன் எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என நெல்லை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை மற்றும் சூறைக்காற்றினால் தங்கள் பகுதிகளில் ஏதேனும் மின்தடை ஏற்பட்டால் பின்வரும் மின்னகம், மின் தடை நீக்கும் மையம் எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு உடனடியாக குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம். மின்னகம் மின் நுகர்வோர் சேவை மையம் 24மணி நேரம் வீதம் வாரம் முழுவதும் செயல்படும். சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தை 94987 94987 என்ற எண்ணிலும், நெல்லை மின் பகிர்மான வட்டத்தில் செயல்படும் மின் தடை நீக்கும் மையத்தை 94458 59032, 94458 59033, 94458 59034, 94458 59157 என்ற செல்போன் எண்களிலும் பொதுமக்கள் தொடர்பு கொண்டு தெரிவித்தால் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

2 × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi