Friday, May 17, 2024
Home » நீலகிரியில் பலத்த மழை பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: அணையின் நீர்மட்டம் 94 அடியை எட்டியது

நீலகிரியில் பலத்த மழை பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: அணையின் நீர்மட்டம் 94 அடியை எட்டியது

by kannappan

சத்தியமங்கலம்:   பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக 2வது பெரிய அணையாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவு கொண்டதாகும். பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான வட கேரளா மற்றும் நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில மாதங்களாக சரிவர மழை இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக நீலகிரி மலைப்பகுதி மற்றும் கேரளாவின் ஒரு சில பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணைக்கு வந்து சேரும் பவானி ஆறு மற்றும் மாயாறு ஆகிய இரண்டு ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு வந்து சேரும் நீரின் அளவும் வெகுவாக அதிகரித்துள்ளது. நேற்று காலை பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 2,998 கன அடியாக இருந்த நிலையில் மாலை 4 மணிக்கு அணைக்கு நீர் வரத்து 4,939 கன அடியாக அதிகரித்தது. நீர் வரத்து அதிகரிப்பால்  அணையின் நீர்மட்டம் 94 அடியை எட்டியுள்ளது. அணையில் நீர் இருப்பு 24.2 டிஎம்சி ஆக உள்ள நிலையில் அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் வினாடிக்கு 1,050 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 94 அடியை எட்டியதால் பாசனப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்….

You may also like

Leave a Comment

nine + 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi