ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன. 75 நாட்களுக்கும் மேலாகிய நிலையில், 6வது கட்டமாக ஊரடங்கை நீட்டித்த தமிழக அரசு, பல்வேறு தளர்வுகளையும் அறிவித்தது. இதில், நீலகிரி மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு இருந்த இ-பாஸ் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. பொழுதுபோக்கு மற்றும் கேளிக்கை பூங்காக்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்படலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்த தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், `நீலகிரி மாவட்டத்தில் இன்று சுற்றுலா தலங்கள் திறக்கப்படாது. சுற்றுலா தலங்கள் திறப்பு குறித்து தமிழக அரசு வழங்கும் வழிகாட்டுதல்களை பெற்ற பின் திறப்பது குறித்து உரிய முடிவெடுக்கப்படும்’ என்றார்….